TN: பள்ளி மாணவர்களுக்கு வழங்க 4.19 கோடி புத்தகங்கள் தயார்

52பார்த்தது
TN: பள்ளி மாணவர்களுக்கு வழங்க 4.19 கோடி புத்தகங்கள் தயார்
தமிழ்நாட்டில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 495 தலைப்புகளில் மொத்தம் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அவற்றில் 2.72 கோடி பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும். எஞ்சியுள்ள 1.47 கோடி பாடநூல்கள் விற்பனைக்காக அச்சிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 64 லட்சம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும். ஒரு வாரத்துக்குள் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நேரடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்தி