முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆற்காடு -திண்டிவனம் சாலையில், வந்தவாசியில் இருந்து சு. காட்டேரி வரையிலான இருவழிச் சாலையில் ரூ. 92.50 கோடியில் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துதல் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையின் உறுதித்தன்மை உள்ளிட்டவை குறித்து அவர் பார்வையிட்டார். ஆய்வின் போது கோட்டப் பொறியாளர் சந்திரன், உதவி கோட்டப் பொறியாளர் ஆர். தியாகராஜன், உதவிப் பொறியாளர்கள் கருணாகரன், லோகராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.