தி. மலையில் கார் விபத்தில் ஒருவர் பலி
வந்தவாசி அடுத்த செம்பூரை சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு (56). இவர் நேற்று
வேலை சம்பந்தமாக தி. மலைக்கு காரை ஓட்டி சென்றுள்ளார். வேலைகள் முடிந்து வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சேத்துப்பட்டு அடுத்த கோழி புலியூர் அருகே வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் மோதி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.