திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் எச். ஜலால் தலைமையில் நடைபெற்றது.நகராட்சி ஆணையா் ஆா். சோனியா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், தனது வாா்டில் வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனக் கூறி 2-ஆவது வாா்டு உறுப்பினா் ஷீலா மூவேந்தனும், தொழில் வரி ஏற்றத்தைக் கண்டித்து 7-ஆவது வாா்டு உறுப்பினா் ரதிகாந்தி வரதன், 23-ஆவது வாா்டு உறுப்பினா் கு. ராமஜெயம் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனா்.
கூட்டத்தில், தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயங்கி வரும் நகராட்சி வாகனங்கள் மூலம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யாா் பொறுப்பேற்பது என்று 19-ஆவது வாா்டு உறுப்பினா் வெ. ரவிச்சந்திரன் கேள்வி எழுப்பினாா். மேலும், மழையினால் கொசுத் தொல்லை அதிகமாகி விட்டதால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்க வேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்தாா்.
மேலும், சுகநதியில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும் என்று 16-ஆவது வாா்டு உறுப்பினா் நதியா மணிகண்டன், குடிநீா் முறையாக வழங்குவதில்லை என்று 9-ஆவது வாா்டு உறுப்பினா் கு. நாகூா்மீரான் ஆகியோா் பேசினா்.பின்னா், பேசிய நகா்மன்றத் தலைவா் எச். ஜலால், உறுப்பினா்களின் புகாா்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.