திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஜப்திகாரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு தெள்ளார் வட்டாரக் கல்வி அலுவலர் தே. ரங்கநாதன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமைஆசிரியை இரா. தேவி வரவேற்றார்.தெள்ளார் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆறுமுகம், ஆசிரியர் பயிற்றுநர் பிரபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மாணவ, மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் பள்ளி ஆசிரியர்கள் ராஜா, லிடியா சொர்ணகுமாரி, சுஜாதா, ஹிதாயத்துல்லாபேக், மேகலா மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.