திருவண்ணாமலை ஸ்ரீ பூத நாராயண பெருமாள் கோயிலில் இன்று (ஜன.3) மார்கழி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.