திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் இன்று (14. 03. 2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கும் உலகளாவிய அணுகல் தன்மை 2021-க்கான இனக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலை குறித்த ஒருநாள் அணுகல் தன்மை உணர்திறன் பயிற்சியினை துவக்கி வைத்தார்.