திருவண்ணாமலை: உலக சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு

திருவண்ணாமலை எஸ் கே வி பன்னாட்டு பள்ளி மாணவி தேவதர்ஷிதா ஆறு நிமிடங்களில் 82 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்த நிகழ்விற்காக பள்ளி தாளாளர் திருநாவுக்கரசு இன்று தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது உடன் பொருளாளர் சோமசுந்தரம் முதல்வர் வடிவேல் ஆசிரியர் நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.