திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி பாமக சார்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆரணி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலர் ஆ. வேலாயுதம் தலைமை வகித்தார். கூட்டத்தில், மே 11-இல் மகாபலிபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு ஆரணி தொகுதியில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அழைத்துச் செல்வது என்று முடிவு செய்தனர்.