திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் கன்று விடும் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி சரவணன் பங்கேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். உடன் திமுக நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் விழா குழுவினரும் இளைஞர்களும் பலர் பங்கேற்றனர். கடலாடி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.