திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு விலையில்லா மிதிவண்டி மற்றும் மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் செய்யாறு தொகுதியில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் O. ஜோதி, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S. அம்பேத்குமார், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி மற்றும் கூடுதல் ஆட்சியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.