திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்டகொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பார்வை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தர்ம நாகேஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயில் பன்னிரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவம் தேர்த்திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. முன்னதாக தேர் திருவிழாவை முன்னிட்டு அதி காலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் போளூர், மண்டகொளத்தூர், கொம்மனந்தல், கரைப்பூண்டி, மட்டைப் பிறையூர், அல்லியாளமங்கலம், விளாபாக்கம், திருமலை, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.