திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோயிலில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனது மனைவி கவிதா உடன் சாமி தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. உடன் போளூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.