திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, செங்கம் நகரத்திற்குட்பட்ட அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் திருவண்ணாமலை மாவட்ட கழக துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இந்நிகழ்வில், நகர கழக செயலாளர் மு. அன்பழகன், நகர மன்ற தலைவர் எச். சாதிக்பாட்ஷா உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.