திருவண்ணாமலை மாட வீதியில் அமைந்துள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் நேற்று புதன்கிழமை ஏகாதசி திதி, ரோஹினி நட்சத்திரத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு வெண்ணை காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.