தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பூ. ரகுபதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சு. பாா்த்திபன் வரவேற்றாா். மாவட்ட தோ்தல் ஆணையா் எஸ். பாலமுருகன், துணைத் தோ்தல் ஆணையா்கள் எம். செளந்தர்ராஜன், டி. தீபன் சக்கரவா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாநில துணைத் தலைவா் எம். எஸ். அன்பழகன், மாநில துணைச் செயலா் டி. டி. ஜோஷி ஆகியோா் புதிய மாவட்டத் தலைவா் பு. ரகுபதி உள்ளிட்ட புதிய நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து, சான்றிதழ் வழங்கினா். விழாவில், வட்டாட்சியா் கே. துரைராஜ், மாவட்ட துணைத் தலைவா்கள் ப. முருகன், வீ. குமாரவேலு, எம். செந்தில்நாதன், மா. ராஜசேகரன், க. முருகானந்தம், மாவட்ட இணைச் செயலா்கள் அழ. உதயகுமாா், ஜெ. பெரியசாமி, அ. இப்ராஹிம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.