திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் அமைந்துள்ள, பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள வன்மீகநாதனுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக தீபாரதனை வழிபாடு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ராகு கால நாகலிங்க பூஜை இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.