திருவண்ணாமலை, கலசப்பாக்கம் வட்டத்தைச் சேர்ந்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பருவதமலையில் மல்லிகார்ஜுனர் பிரம்மராம்பிகைக்கு ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது.
பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.