திருவண்ணாமலை: வெறிச்சோடி காணப்பட்ட அரசு அலுவலகம்

50பார்த்தது
திருவண்ணாமலை: வெறிச்சோடி காணப்பட்ட அரசு அலுவலகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகளை வழங்க வேண்டும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட கணினி உதவியாளர்கள் மற்றும் எஸ்.பி.எம்., திட்ட ஒருங்கிணைப்பாளரை பணி வரன்முறைப்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஊரக வளர்ச்சி துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 2ம் தளத்தில் உள்ள ஊரக வளர்ச்சி பிரிவில் வேலை நிறுத்தம் காரணமாக அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலும் பெரும்பான்மையான அலுவலர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது

தொடர்புடைய செய்தி