திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து வழிபாடு செய்கின்றனர். கடந்த ஆறு மாத காலமாக ஆந்திரா, தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்ட விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
குறிப்பாக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 36 லட்சத்தில் இரு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி நேற்று உயர் மின் கோபுர விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ. வே. வே. கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டிவிஏ ராஜாராம், சினம் பெருமா நகர மன்ற துணை தலைவர் சு. ராஜாங்கம் குணசேகரன் வழக்கறிஞர் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.