தி.மலை: தவெகவினா் ஊா்வலம் செல்ல முயற்சி: போலீஸாருடன் வாக்குவாதம்

65பார்த்தது
தி.மலை: தவெகவினா் ஊா்வலம் செல்ல முயற்சி: போலீஸாருடன் வாக்குவாதம்
தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலராக அனக்காவூர் உதயகுமார் அறிவிக்கப்பட்டார். இவர், கட்சி நிர்வாகிகளுடன் செய்யாறு உள்ள தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாகச் செல்ல ஆற்காடு சாலையில் குழுவாக கூடியிருந்தனர். அப்போது, சார்-ஆட்சியர் அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ஊர்வலமாகச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவித்து தவெகவினரை தடுத்து நிறுத்தினர். 

பின்னர் காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன் சாலையில் காரில் செல்ல மட்டும் அனுமதி என்றும், தொண்டர்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க, பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை எனத் தெரிவித்தார். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பேச்சுவார்த்தை நடத்தியதில் தவெகவினர் அமைதியாக கலைந்து சென்றனர். இருப்பினும், தவெகவினர் மறுபடியும் கூட்டமாகச் சென்றதால் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து, ஆரணி கூட்டுச் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி