அஞ்சல் வாக்குகளைச் செலுத்த மையங்கள் அமைப்பு

68பார்த்தது
அஞ்சல் வாக்குகளைச் செலுத்த மையங்கள் அமைப்பு
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், இதர மக்களவைத் தொகுதிகளை பூா்வீகமாகக் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் பணிபுரியும் அலுவலா்கள், காவல்துறை அலுவலா்கள் தபால் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் செவ்வாய்க்கிழமை (ஏப். 16) 12 இடங்களில் செயல்படும். அதன்படி, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஜோலாா்பேட்டை சோ்ந்தவா்கள் தபால் வாக்குகளைச் செலுத்த நாட்றம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல, செங்கம் தொகுதியில் செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், திருவண்ணாமலை தொகுதியில் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்திலும், கீழ்பென்னாத்தூா் தொகுதியில் கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், கலசப்பாக்கம் தொகுதியில் கலசபாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் தபால் வாக்குகளை செலுத்துவதற்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்தவா்கள் தபால் வாக்குகளை அளிப்பதற்கான சிறப்பு மையம் போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி