திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அழிவிடைதாங்கி ஊராட்சியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நிறைவு சமுதாயகூடம் கட்டிடத்தினை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு பயன்பாட்டிற்கு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார் , செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஒ. ஜோதி , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.