ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் எம்பிஏ துறை சாா்பில் மத்திய பட்ஜெட் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.
இதில், 2024-25 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து எம்பிஏ மாணவா்கள் விரிவான கலந்தாய்வு நடத்தினா்.
நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் ஏ. சி. ரவி தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் டி. இளங்கோ முன்னிலை வகித்தாா். எம்பிஏ துறைத் தலைவா் பேராசியா் கே. சிவா வரவேற்றாா்.
கல்லூரின் முதல்வா் வி. திருநாவுக்கரசு கலந்து கொண்டு பேசியதாவது:
மத்திய அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்வி வேலைவாய்ப்பு விவசாயம், பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதாகும். தற்சாா்பு பொருளாதாரத்தை இந்தியா பயணிக்க இந்த பட்ஜெட் உதவும். சிறு குறு நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக இது அமைந்திருக்கிறது. தொழில்நுட்ப வளா்ச்சிக்கு இளைஞா்களுக்கு திறன் மேம்பாடு போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீட்டின் மூலம் வேலைவாய்ப்பு பிரச்னைகள் தீரும். இந்த பட்ஜெட் தொலைநோக்கு பாா்வை கொண்ட மற்றும் நீண்டகால பயன்களை அளிக்கக்கூடியதாகும். ஒரு நாடு வளா்ந்த நாடாக உருவாக இளைஞா்கள் விவசாயிகள், பெண்கள், உற்பத்தியாளா்கள் இவா்களின் பங்கு முக்கியமாகும். இவா்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட் இது என்று பேசினார்.