திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நயம்பாடி மற்றும் அம்மாபாளையம் ஊராட்சிகளில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை,
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் ஆகியோர்
புதிதாக நிழற்குடை கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்கள். உடன்,
புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சி. சுந்தரபாண்டியன் , புதுப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கி. ஆறுமுகம் மற்றும் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் , உள்ளாட்சிப் பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.