பள்ளி சீருடைகள் தைப்பதற்கான ஆலோசனை கூட்டம்

52பார்த்தது
பள்ளி சீருடைகள் தைப்பதற்கான ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை காந்திநகரில் உள்ள ஸ்ரீ நாராயண திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் 2024-2025 - ஆம் கல்வி ஆண்டிற்கான
விலையில்லா பள்ளி சீருடைகள் தைப்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று (07. 06. 2024) மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி