திருவண்ணாமலை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ், ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன், திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் C. N. அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் திருவண்ணாமலை மாநகராட்சி துணைத் தலைவர் ராஜாங்கம் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், அரசுத்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.