திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்நெமிலி பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை இறைவணக்க கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமையில், பள்ளி ஆசிரியை அப்ரின் பானு உறுதிமொழியை வாசித்து அதனை பின்னர் தொடர்ந்து வாசித்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.