புகைப்பட சங்க செயற்குழு கூட்டம், எம்எல்ஏ பங்கேற்பு

70பார்த்தது
புகைப்பட சங்க செயற்குழு கூட்டம், எம்எல்ஏ பங்கேற்பு
செய்யாறு வழியாக தென் மாவட்ட பகுதிகளுக்குச் செல்லும் தொலைநிலை பேருந்துகளை இயக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட புகைப்பட சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. செய்யாற்றில் தனியாா் அரங்கில் நடைபெற்ற சங்கக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கலைராஜா தலைமை வகித்தாா். செய்யாறு புகைப்பட சங்கத் தலைவா் தசரதன், செயலா் நடராஜன், பொருளாளா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைச் செயலா் டி. ராஜி வரவேற்றாா். மாநில துணைச் செயலா் அசோக், மண்டலச் செயலா் மயிலாபுரம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம். எல். ஏ. ஒ. ஜோதி பங்கேற்று சங்க உறுப்பினா் அடையாள அட்டையை வழங்கிப் பேசினாா். கூட்டத்தின் போது, திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும். செய்யாறு வழியாக தென்மாவட்டப் பகுதிகளுக்குச் செல்லும் தொலைநிலை பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திமுக ஒன்றியச் செயலா்கள் வி. ஏ. ஞானவேல், எம். தினகரன், சங்க நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி