செய்யாற்றில் அதிமுகவினா் 400-க்கும் மேற்பட்டோா் ஊா்வலம்

57பார்த்தது
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்தும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அதிமுகவினா் 400-க்கும் மேற்பட்டோா் ஊா்வலமாகச் சென்று சாா்-ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா்.

அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி 9 பெண்கள் உள்பட 269 பேரை கைது செய்து, பேருந்துகளில் ஏற்றி தனியாா் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பேருந்துகளில் ஏற்றும் போது ஒருவருக்கொருவா் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நிகழ்ந்தது.

இதில், வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே. மோகன் தலைமையில், முன்னாள் அமைச்சா் முக்கூா் என். சுப்பிரமணியன், நகரச் செயலா் கே. வெங்கடேசன், எம்ஜிஆா் மன்ற மாநில துணைச் செயலா் ஜாகீா் உசேன்,

ஒன்றியச் செயலா்கள் எம். அரங்கநாதன், சி. துரை, வயலூா் ராமநாதன், எஸ். திருமூலன், எம். மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி