திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம், ஈயகொளத்தூர் ஊராட்சி புலிவானந்தல் கிராமத்தில் போளூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதி ரூ.9,32,000/- மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. எல். ஜெயசுதா லட்சுமி காந்தன், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.