தமிழக விவசாயிகள் சங்கத்தை நிறுவி, விவசாயிகளின் வாழ்வுரிமைக்காகப் போராடிய நாராயணசாமி நாயுடு அவர்களின் 40 - வது நினைவு தினத்தை முன்னிட்டு ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி மாநிலத் துணைத் தலைவர் சதுப்பேரி மூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அவரது உருவ புகைப்படங்களுக்கு மலர் தூவி நினைவு நாள் தினம் அனுசரிக்கப்பட்டது. பின்னர் அவரை போற்றும் வகையில் சமூக ஆர்வலர் ஏ. பெருமாள், மாநில துணைத் தலைவர் மூர்த்தி , விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு மரக்கன்று நட்டனர்.