திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவக உரிமையாளர்களுடன் மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர். இராம் பிரதீபன், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் இராமகிருஷ்ணன், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.