திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் அமைந்துள்ள, தையல்நாயகி மற்றும் நந்தீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.