திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி. எம். கதிரவன் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வு பற்றி சிறப்புரை ஆற்றினார். இதில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.