திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தூக்காப்பேட்டை பகுதியில் அடிமை அதிமுக ஆட்சியில் அகற்றப்பட்டு திராவிட மாடல் ஆட்சியில் மீட்கப்பட்ட புரட்சியாளர் Dr. BR. அம்பேத்கர் உருவச்சிலை புனரமைக்கப்பட்டு நிறுவும் பணியினை மாவட்ட கழக துணை செயலாளரும் , செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில், நகர கழக செயலாளர் அன்பழகன், பேரூர் தலைவர் சாதிக்பாட்ஷா, மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர் முருகன், ஊர் நாட்டாமை குப்புசாமி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள், சிலை அமைப்புக்குழு இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.