திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த 14-ந் தேதி முதல் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சின்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் உள்பட போலீசார் கடந்த 4 நாட்களில் 5 பெண்கள் உள்பட 13 பேரை கைது செய்துள்ளனர்.