திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈன்ற திருவண்ணாமலை வடக்கு மாவட்ட
கழக செயலாளர்
M. S. தரணிவேந்தன், இன்று ஆரணியில் அமைந்துள்ள பெரியார், அம்பேத்கார், அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு திமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் கழக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.