இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

73பார்த்தது
இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே உள்ள ஈராடி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி ஷாலினிக்கும் (வயது 26), அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (31) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று. செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் ராஜா, துர்கா, கனகாம்பாள் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து ஷாலினியை ஆபாசமாக திட்டியதோடு அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் தச்சம்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி