ஆரணி ஏ. சி. எஸ். குழுமக் கல்லூரிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் செப். 25 முதல் விளையாட்டு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.
மேலும், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியா் தினம், பொறியாளா் தினம், கல்லூரி நிறுவனா் தினம் என முப்பெரும் விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆரணி ஏ. சி. எஸ். மெட்ரிக் பள்ளி மாணவா்கள்
இ. கௌதம், ஆா். பி. சன்சய்தரன், ஆா். வி. வினோதா ஆகியோா் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்து சோ்ந்துள்ளனா். இந்த 3 பேரையும் பாராட்டி விருதும், ஆசிரியா் தினத்தையொட்டி, ஆசிரியா்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.