போலீஸ் தலைமையில் மனு விசாரணை முகாம்

85பார்த்தது
போலீஸ் தலைமையில் மனு விசாரணை முகாம்
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்று வருகின்றது. இதில் காவல் துறை மூலம் தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். அதன்படி இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாம
மிற்கு சைபர் கிரைம் பிரிவு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று விசாரணை நடத்தினார். பின்னர் அதன் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் தொடர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி