திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் கொங்கராம்பட்டு ஊராட்சி பகுதியில் குப்பை கழிவுகள் வேலூர் ஆரணி சாலையில் எரிந்து புகை மூட்டம் வெளியில் வருவதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர் இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதியில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.