ஆரணியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் நேற்று கால்பந்துப் போட்டி நடைபெற்றது.
கோட்டை மைதானத்தில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியை அதிமுக மத்திய மாவட்டச் செயலர் எல். ஜெயசுதா தொடங்கிவைத்தார். ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் பாரி பி. பாபு தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியச் செயலர் ஜி. வி. கஜேந்திரன் வரவேற்றார். போட்டிகளில் ஆரணி, வேலூர், திருவண்ணாமலை, ஆற்காடு, வாலாஜா, செய்யாறு, சேத்துப்பட்டு, வந்தவாசி, திமிரி, தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து 18 அணிகள் கலந்து கொண்டன.
இதில் வெற்றி பெற்ற முதல் அணிக்கு பரிசாக ரூ. 10,077 மற்றும் பரிசுக் கோப்பை, 2-ஆவது பரிசாக ரூ. 7,077 மற்றும் பரிசுக் கோப்பை, 3-ஆவது பரிசாக ரூ. 5,077 மற்றும் பரிசுக் கோப்பை, 4-ஆவது பரிசாக ரூ. 3,077, 5-ஆவது பரிசாக ரூ. 2,077 வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆரணி அதிமுக நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றியச் செயலர்கள் ஜெயப்பிரகாசம், திருமால், மாவட்ட துணைச் செயலர் வனிதா சதீஷ், அவைத் தலைவர் ஜோதிலிங்கம், நகர்மன்ற உறுப்பினர்கள் சுதா குமார், பாரதிராஜா, விநாயகம், சசிகலா சேகர், சிவக்குமார், கிருபாசமுத்ரி சதீஷ், மீனவரணி மாவட்டச் செயலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.