ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், அமிர்தி வனப்பகுதியிலும், ஜவ்வாதுமலை தொடர்ச்சியிலும் கடந்த வாரம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நாகநதி ஆற்றிலும், கமண்டல நாகநதி ஆற்றிலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக குன்னத்தூர், சேவூர், காமக்கூர், களம்பூர், சம்புவராயநல்லூர், அக்ராபாளையம், இரும்பேடு, பனையூர், மட்டதாரி உள்பட பல ஏரிகளுக்கு பாசன கால்வாய் மூலமாக தண்ணீர் செல்கின்றது.