பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

51பார்த்தது
பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் பாஜகவை கண்டித்து ஆரணி பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் சிலை அருகில் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவா் ஜெ. பொன்னையன் தலைமை வகித்தாா். வட்டார தலைவா்கள் துளசிதரன், சுகன்யா, முரளிமுருகா, மணி, மாவட்ட செயலாளா்கள் மாணிக்கம், சத்தியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் உதயகுமாா் வரவேற்றாா். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவா் வி. பி. அண்ணாமலை கலந்து கொண்டு ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி