ஆரணி: சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசனைக் கூட்டம்

85பார்த்தது
ஆரணி: சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசனைக் கூட்டம்
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கோட்டாட்சியர் (பொ) ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், ஆரணி வட்டாட்சியர் கௌரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி, போளூர், கலப்பாக்கம் தொகுதிகளைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், வாக்குச்சாவடியின் அடிப்படை வசதிகள், 2 கிமீ. தொலைவுக்கு அப்பால் உள்ளவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடி மையத்தை மாற்றி அமைத்தல், கூடுதல் வாக்குச்சாவடிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும். அவ்வாறான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்களை அமைத்து வீடியோ பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

மேலும், கூட்டத்தில் திமுக சார்பில் தொகுதி பொறுப்பாளர் எஸ். எஸ். அன்பழகன், நகரமன்றத் தலைவர் ஏ. சி. மணி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றியச் செயலர் மாமது, நகரமன்ற உறுப்பினர் மாலிக்பாஷா, அதிமுக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி