திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் தலைமையில் இன்று (15.04.2025) அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி - 2025 முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தற்காலிக பஸ் நிலையங்களில் நிழற்பந்தல், குடிநீர், கழிப்பிட வசதிகளை செய்ய வேண்டும். மேலும், காவல் உதவி மையங்கள், காவல் கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறைகள், கார், வேன்களை நிறுத்த பார்க்கிங் வசதி என விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
மேலும், அண்ணாமலையார் கோயிலில் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, கோயில் நிர்வாகமும், காவலத்துறையும் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.