இடைநின்ற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய கலெக்டர்

82பார்த்தது
இடைநின்ற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , செங்கம் கணேசர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற "உங்களை தேடி, உங்கள் ஊரில் " திட்டத்தில் கலந்து கொண்டு செங்கம் பகுதியைச் சேர்ந்த பள்ளி கல்வியை இடைநின்ற மாணவ, மாணவியர்களை கண்டறிந்து பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தி பள்ளி புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு. பிரியதர்ஷினி, ஒன்றியக் குழு தலைவர் விஜயராணி குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி