ஆரணி: நவீன எரிவாயு தகனமேடைக்கான பூமி பூஜை

56பார்த்தது
ஆரணி: நவீன எரிவாயு தகனமேடைக்கான பூமி பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி கண்ணமங்கலம் பேரூராட்சியில் ரூபாய் ஒரு கோடியே 64 லட்சத்தில் நவீன எரிவாயு தகனமேடைக்கான பூமி பூஜையை தொடர்ந்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான M. S. தரணிவேந்தன் முதல் செங்கல்லை எடுத்து கொடுத்து பணியினை துவங்கி வைத்தார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R. சிவானந்தம், ஒன்றிய செயலாளர் S. S. அன்பழகன், மாவட்ட பொருளாளர் D.A. தட்சிணாமூர்த்தி, ஆரணி நகர மன்ற தலைவர் A.C. மணி, ஒன்றிய செயலாளர் M. சுந்தரதுரைசாமி, S. மோகன், K. கோவர்தனன் பேரூர் நகர மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், திமுக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி