திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 54.75 லட்சத்தில் பொது சுகாதார ஆய்வகம் திறக்கப்பட்டது. 15-ஆவது நிதிக் குழு மானியத்தின் கீழ், கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார ஆய்வக அறையை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
அதே வேளையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆா். சிவானந்தம் குத்துவிளக்கேற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், திமுக தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ். அன்பழகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி. மணி, திமுக ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, எஸ். மோகன், அரசு மருத்துவா் சுரேஷ்பாபு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரேணுகோபால், தசரதராமன், ஊராட்சித் தலைவா் வடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.